For Daily Alerts
Just In
சீனாவில் தடுப்புச் சுவரில் மோதி வெடித்துச் சிதறிய பேருந்து... 30 பேர் பலி
பெய்ஜிங்: சீனாவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று தடுப்புச் சுவரில் மோதி வெடித்துச் சிதறியதில் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹுனான் மாகாணத்தில் இன்று 56 பயணிகளுடன் நெடுஞ்சாலை வழியாக பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று சாலையின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரின்மீது பேருந்து வந்த வேகத்தில் மோதியதாக தெரிகிறது. இதனால், பேருந்தின் எஞ்ஜின் வெடித்ததில், பேருந்து முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 21 படுகாயம் அடைந்துள்ளதாகவும், காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
Comments
English summary
China's state broadcaster CCTV says at least 30 people have been killed in a fire aboard a tourist bus in the central province of Hunan.
Story first published: Sunday, June 26, 2016, 15:29 [IST]