For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1000 வருடங்கள் பழமையான தமிழகத்தை சேர்ந்த நடராஜர் சிலை.. ஆஸ்திரேலியாவிலிருந்து நாளை திரும்புகிறது

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் அந்த நாட்டின் தேசிய கேலரி இயங்கிவருகிறது. இங்கு உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த சுபாஷ்கபூர் என்ற பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்யும் டீலரிடமிருந்து 5.6 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் பணம் கொடுத்து ஆஸ்திரேலிய கேலரி வெண்கலத்தால் செய்த நடராஜர் சிலையை வாங்கியுள்ளது. அதை தனது கேலரியில் காட்சிக்கும் வைத்துள்ளது.

Australia to return the 1,000-year old Nataraja idol to India on tomorrow

2012ம் ஆண்டு சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ்கபூரை போலீசார் கைது செய்தபோது, ஆஸ்திரேலிய கேலரிக்கு நடராஜர் சிலையை விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இவர் மீதான வழக்கு தமிழகத்தில் நடந்துவருகிறது.

இதையடுத்து இந்தியா அந்த சிலையை திருப்பிக்கொடுக்குமாறு ஆஸ்திரேலிய கேலரியை கேட்டுக்கொண்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் சிலையை திருப்பி அளிக்க ஆஸ்திரேலிய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.

16ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த நடராஜர் சிலை, நாளை தமிழகம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
the National Gallery of Australia to return the 1,000-year old Nataraja idol to India on tomorrow, says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X