காட்டுத் தீயில் பலியான தீயணைப்பு வீரர்.. இறுதி சடங்கில் சவப்பெட்டியை சுற்றி வந்த ஒரு வயது மகள்
Recommended Video
சிட்னி: காட்டுத் தீயில் சிக்கி பலியான தீயணைப்பு வீரரின் ஒன்றரை வயது மகள் அவரது ஹெல்மெட்டை தலையில் அணிந்து கொண்டு சவப்பெட்டியை சுற்றி வந்தது அங்கிருப்போரின் நெஞ்சை உருக வைத்தது.
ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூசவுத் வேவ்ஸ் ஆகிய பகுதிகளிலும் விக்டோரியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருகிறது.
சுமார் 3 மாதங்களாக காட்டுத் தீ பரவி வரும் நிலையில் இதுவரை 18 பேர் பலியாகிவிட்டதாக தெரிகிறது. விக்டோரியாவின் சன்புரி அருகே காட்டுத்தீ தொடர்ந்து பரவுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்கள்
இந்த காட்டுத் தீயில் கோடிக்கணக்கான வனவிலங்குகள் அழிந்துவிட்டன. அத்துடன் அரிய வகை மூலிகைகளும் கருகிவிட்டன. இந்த அணையாத காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்ட்ரூ இறப்பு
தீயை அணைக்கும் முயற்சியில் சிக்கி 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இறந்துவிட்டனர். இந்த தீவிபத்தில் சிக்கி நேற்று முன்தினம் தீயணைப்பு வீரர் ஆண்ட்ரூ இறந்துவிட்டார்.
மனதை உருக்கிய சம்பவம்
அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் அவரது ஒன்றரை வயது மகள் சார்லெட் தனது தந்தை அணியும் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு ஏதும் அறியாமல் சவப்பெட்டியை சுற்றி சுற்றி வந்த காட்சி அங்கிருந்தோர் மனதை உருக வைத்துவிட்டது.
தீயணைப்பு வீரர்கள்
ஆண்ட்ரூவின் தியாகத்தை போற்றும் விதமாக வழங்கப்பட்ட பதக்கத்தை சார்லெட் பெற்றுக் கொண்டார். உனது தந்தை உண்மையான வீரர் என கூறி அந்த பதக்கத்தை குழந்தையிடம் கொடுத்தார் தீயணைப்பு அதிகாரி.