200 கிலோ ஐஸ்கட்டிகள்.. இரண்டரை மணி நேரம்.. ஐஸ்பெட்டிக்குள் ஒரு சாதனை.. அசர வைக்கும் ஆஸ்திரியா மனிதர்
ஆஸ்திரியாவை சேர்ந்த ஜோசப் கோபெர் என்பவர் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட தொட்டியில் இரண்டரை மணி நேரம் அமர்ந்து சாதனை படைத்திருக்கிறார்.
வியன்னா: ஆஸ்திரியாவில் இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக சுமார் 200 கிலோ ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட தொட்டியில் அமர்ந்து தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துள்ளார் ஜோசப் கோபெர்.
பிரிட்ஜில் இருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து சும்மா ஒரு நிமிடம் கையில் வைத்திருந்தாலே நமது கை மரத்துப் போய்விடும். ஆனால் ஆஸ்திரியாவை சேர்ந்த ஒருவர் ஐஸ் கட்டிகளை வைத்து பல சாதனைகள் படைத்து அசரடித்து வருகிறார்.
ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர் ஜோசப் கோபெர். இவருக்கு ஐஸ் கட்டிகள் தான் மெத்தை போலும்.
பூ ஒன்று புயலாக மாறியது... சர்..சர்... டுர்..டுர்... பைக் ஆம்புலன்ஸ் ஓட்டி அசத்திய ரோஜா..!
சாதனை
கடந்த 2019ம் ஆண்டு 30 நிமிடங்கள் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட பெட்டியில், தலையை தவிர உடல் முழுவதையும் அமர்த்தி சாதனை படைத்தார் அவர். இது நடந்த இடம் லோயர் ஆஸ்திரியாவின் டவுன் ஸ்கோயர் ஆஃப் மெல்க் எனும் பகுதி.
புதிய சாதனை
தற்போது அவர் அந்த சாதனையை முறியடித்த புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இந்த முறை 200 கிலோ ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட தொட்டியில் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் 57 நொடிகள் தலையை தவிர உடல் முழுவதையும் அமர்த்தி அனைவரையும் அசரடித்து இருக்கிறார்.
பாராட்டு
"நேர்மறையான சிந்தனைகள் மற்றும் சித்திரங்களை கற்பனை செய்து எனது வலிக்கு எதிராக நான் போராடுகிறேன். இதன் மூலம் எனது வலியை என்னால் தணிக்க முடிகிறது", என்கிறார் ஜோசப். ஐஸ் கட்டிகள் கொடுக்கும் வலியை தாங்கும் அவரது அசாதாரமான திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
வாழ்த்துக்கள்
தனது இந்த சாதனையை மீண்டும் முறியடித்து இன்னும் அதிக நேரம் ஐஸ் கட்டிகளில் அமர்ந்திருக்க போவதாக தெரிவித்துள்ளார் ஜோசப். இந்த சாதனையை அடுத்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிகழ்ச்சி காட்ட திட்டமிட்டிருக்கிறார். வலியை வெல்லும் இந்த ஐஸ் மனிதரின் வெற்றி பயணம் தொடர நாமும் வாழ்த்துவோம்.