கையில் கோடாரியுடன் திரிந்த மனிதன்– நியூயார்க்கில் சுட்டுக் கொலை!
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோடாரியுடன் திரிந்த மனிதன் ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குயின்ஸ் ஷாப்பிங் பகுதியில் ஒரு மர்ம ஆசாமி கையில் கோடாரியுடன் சுற்றி கொண்டு இருந்தான்.
இதை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் வந்து அவனிடம் பேச்சு கொடுத்தனர் . உடனடியாக அவர்கள் மீது மர்ம மனிதன் தாக்குதலில் இறங்கினான். போலீசார் அவனை நோக்கி துப்பாகிச் சூடு நடத்தினர்.
இதில் அவன் அதே இடத்தில் பலியானான்.இந்த தாக்குதலில் 4 போலீசார் படுகாயம் அடைந்தனர். ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் ஒரு பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து நியூயார்க் போலீஸ் கூறும் போது, " இந்த தாக்குதலுக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. அந்த மனிதனுக்கு 32 வயது இருக்கும் . அவன் யார் என்று தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.