For Daily Alerts
Just In
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலை படை தாக்குதல்.. 21 பேர் சாவு
பாக்தாத்: ஈராக் தலைநகரான பாக்தாத்தில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி ஓட்டிவந்த கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக்கின், நஹ்ரவான் மாவட்டத்தின் பிரபல மார்க்கெட் பகுதியில் இன்றுகாலை நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 40க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Comments
English summary
The Islamic State group claimed responsibility for a bombing Saturday east of Baghdad, according to a statement posted on an IS-affiliated website. The attack killed at least 21 people and wounded at least 42 others.
Story first published: Saturday, April 30, 2016, 17:28 [IST]