ஆஸ்திரியாவில் புனித நீரால் நன்மையை விட தீமை தான் அதிகம்: அதிர்ச்சி ரிப்போர்ட்
வாஷிங்டன்: புனிதமானது என்று கூறப்படும் புனித நீரால் நன்மையை விட தீமை தான் அதிகம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வியன்னா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்திரியாவில் உள்ள 21 ஊற்றுகள் மற்றும் வியன்னாவில் உள்ள 18 நீர் நிலைகளில் இருந்து நீரை எடுத்து ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் முடிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
ஞானஸ்நானம்
தேவாலயங்களில் ஞானஸ்நானம் செய்ய மற்றும் திருச்சபையைச் சேர்ந்தவர்களின் உதடுகளை நனைக்க பயன்படுத்தும் புனித நீரில் 86 சதவீதம் நீரில் கழிவுகளில் இருக்கும் பேக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நோய் தான்
பேக்டீரியாக்கள் நிறைந்த புனித நீரால் மனிதர்களுக்கு வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படும்.
உரம்
வயல்களில் பயன்படுத்தப்படும் உரங்களில் இருக்கும் நைட்ரேட்ஸ் புனித நீரில் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கூட்டம்
தேவாலயங்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள தேவாலயங்களுக்கு எவ்வளவு பேர் வருகிறார்களோ அதை பொருத்து பேக்டீரியாவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.