வெள்ளிக்கிழமை ராமசாமின்னா அது ராதாரவி.. சனிக்கிழமையாச்சுன்னா.. "டாக்டர் நேபாள பிரதமர்"!
திம்பு: பூடான் பிரதமரான லோட்டே ஷெரிங் சனிக்கிழமைகளில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பணியை மேற்கொண்டு வருகிறார்.
பூட்டானில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் லோட்டே ஷெரிங் அந்நாட்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மருத்துவரான இவர், நாட்டின் பிரதமரான பிறகும் தொடர்ந்து மருத்துவ தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
50 வயதான லோட்டே ஷெரிங் மருத்துவத்துறையில் சிறுநீரக செயலிழப்பு அறுவை சிகிச்சை தொடர்பான படிப்பை முடித்துள்ளார். இவர் அந்நாட்டின் ஜிக்மி டோர்ஜி வாங்ஜூக் தேசிய மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
போனா வராது.. நல்ல சான்ஸை மிஸ் செய்ய நினைக்கும் ஸ்டாலின்.. இனியாவது சுதாரிப்பாரா?
சனிக்கிழமையில் டாக்டர்
வாரம் முழுவதும் பிரதமராக நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் லோட்டே சனிக்கிழமைகளில் மருத்துவராக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு இவர் அறுவை சிகிச்சைகளையும் செய்து வருகிறார்.
வார இறுதி நாட்கள்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லோட்டே, சிலர் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க கோல்ப் விளையாடுகிறார்கள், சிலர் வில்வித்தை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள், அதே போல நான் என வார இறுதியை கழிக்கிறேன். என்று கூறினார்.
கடைசிகாலம் வரை
எனது மன அழுத்தத்தை குறைக்கவே நான் இந்த மருத்துவ தொழிலை செய்து வருகிறேன். இதனை எனது கடைசி காலம் வரை தொடர்ந்து செய்ய உள்ளேன். இவ்வாறு பிரதமர் லோட்டே கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு முதல் பிரதமர்
ஏழரை லட்சம் மக்கள் வாழும் பூட்டானில் கடந்த 2008ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக நடைபெற்ற ஜனநாயக தேர்தலில் லோட்டே நாட்டின் பிரதமரானார்.
சாதாரணமாக தொடருகின்றனர்
பிரதமர் லோட்டே மருத்துவமனையில் பணி செய்யும் நாட்களில் யாரும் அவரை பிரதமராக பார்ப்பதில்லை. மாறாக மருத்துவர் உடையணிந்தது அனைவரும் தங்களின் வேலைகளில் பிஸியாக உள்ளனர். செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் வேலையை சாதாரணமாக தொடர்கின்றனர்.
மருத்துவ தொழில்
நம்ம ஊர் அரசியல்வாதிகள் வார்டு கவுன்சிலர்களாகி விட்டாலே செய்யும் தொழிலை விட்டுவிட்டு சுமோ காரில் வலம் வர தொடங்கி விடுகிறார்கள். ஆனால் நாட்டின் பிரதமரான பிறகும் கூட தனது மருத்துவ தொழிலை தொடரும் பூட்டான் பிரதமர் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.