For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் எஸ்.பி.பி., சித்ரா பங்கேற்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சின்னக்குயில் சித்ரா கலந்து கொள்ளும் மாபெரும் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.

துபாயில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடா ஆகிய மொழிகளில் இந்திய இசை நிகழ்ச்சி வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி நடைபெறுகிறது. மத்திய கிழக்கு நாட்டில் முதல்முறையாக மிகப்பெரிய அளவில் நடக்கும் பன்மொழி இந்திய இசை நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Biggest musical concert in Dubai

இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் பத்மபூஷன் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பத்மஸ்ரீ சின்னக்குயில் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு ரசிகர்களை இசை மழையில் நனைக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி துபாய் ட்யூட்டி ஃப்ரீ டென்னிஸ் ஸ்டேடியத்தில் இரவு 9 மணிக்கு துவங்குகிறது. நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 00971505865375, 00971569841885 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்து அமீரக எக்ஸ்சேஞ் கிளைகளிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Biggest Multilingual Indian Musical concert will be held in Dubai on november 20. Legendary singers S.P.B and Chitra will entertain the audience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X