விளையாட்டில் வெற்றி பெற்றால் கன்னி கழியாத சிறுமிகள் பரிசு: இந்த கொடுமை பிரேசிலில்
பிரேசிலியா: பிரேசிலில் ராபல்ஸ் மற்றும் பிங்கோ ஆகிய விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கன்னி கழியாத சிறுமிகள் பரிசாக அளிக்கப்படுகிறார்கள்.
சிரியா மற்றும் ஈராக்கில் அட்டகாசம் செய்யும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி வந்து செக்ஸ் அடிமைகளாக வைத்துக் கொள்கிறார்கள் அல்லது விற்று விடுகிறார்கள். இந்நிலையிலே இதே போன்ற கொடூரம் தென்னமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்று வருகிறது.
பிரேசிலில் உள்ள என்க்ருசில்ஹடா என்ற நகரில் ஆண்கள் போட்டி போட்டு ராபல்ஸ் டிக்கெட் வாங்குகிறார்கள். காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் பரிசாக கன்னி கழியாத சிறுமி கிடைப்பார். அந்த சிறுமியை தங்களின் இச்சையை தீர்த்துக் கொள்ள பயன்படுத்தலாம் என்று தான் டிக்கெட் வாங்குகிறார்கள்.
டிக்கெட் ஒன்றின் விலை ரூ.500 ஆகும். மேலும் பிங்கோ போட்டியில் வெற்றி பெறுபவருக்கும் கன்னி கழியாத சிறுமிகள் பரிசாக அளிக்கப்படுகிறார்கள். உலகிலேயே குழந்தைகளை வைத்து அதிக அளவில் விபச்சாரம் செய்யும் நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
என்க்ருசில்ஹடா நகர் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். சிறுமிகளும் பணத்திற்கு ஆசைப்பட்டு பரிசுப் பொருளாக ஆக சம்மதிக்கிறார்கள்.