For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரியாத்தில் நடந்த சுதந்திர தின சிறப்பு ரத்த தான முகாம் – 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Google Oneindia Tamil News

ரியாத்: ரியாத்தில் இந்தியாவின் 68 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டின்படி நேற்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் 100 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 66 பேரிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டது.

இதில் தமிழர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பலர் ரத்ததானம் செய்தனர்.

அதுபோன்று இந்தியர்களுடன் இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஏமன், சிரியா, எத்தியோப்பியா மற்றும் சவுதி நாட்டவரும் இந்த இந்திய சுதந்திர தின இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

இது தவ்ஹீத் ஜமாத்தின் ரியாத் மண்டலம் நடத்தும் 31 ஆவது இரத்ததான முகாமாகும். வளைகுடா நாடுகளில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Tawheth jamad conducted a independence day special blood donation camp in Riyadh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X