ஆட்டோ ஷோவில் பேசியபோது திடீரென மயங்கி விழுந்த பிஎம்டபிள்யூ சி.இ.ஓ.
பிராங்க்பர்ட்: ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நடந்த ஆட்டோ ஷோவில் கலந்து கொண்டு தங்களது புதிய தயாரிப்பு குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது பிஎம்டபிள்யூ நிறுவன தலைமை செயலதிகாரி ஹரால்ட் க்ரூகர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சர்வதேச ஆட்டோ ஷோ பிராங்க்பர்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. பிஎம்டபிள்யூவும் அதில் ஒன்று.
இந்த நிகழ்ச்சியின்போது தங்களது தயாரிப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பிஎம்டபிள்யூ நிறுவன தலைமை செயலதிகாரி ஹரால்ட் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயக்கம் போட்டு அப்படியே பின்னா் கவிழ்ந்து விழந்து விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது உதவியாளர்கள் அவரைத் தூக்கிப் பிடித்து நிறுத்தின்னர். பின்னர் அவர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ நிறுவன செய்திக்குறிப்பில், காலையில் வெளிநாடு போய் விட்டுத் திரும்பியது முதலே சோர்வாக இருந்தார் ஹரால்ட். அதுவே மயக்கத்திற்குக் காரணம். தற்போது அவர் இயல்பாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.