For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியா அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கியது- 66 பேர் பலி?

By Mathi
Google Oneindia Tamil News

Boat Sinks Off Western Malaysia, 66 Feared Drowned
கோலாலம்பூர்: இந்தோனேசியாவில் இருந்து அகதிகளுடன் மலேசியா நோக்கி வந்த படகு கடலில் மூழ்கியதில் 66 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியாவில் இருந்து சட்டவிரோதமாக மலேசியா செல்வதற்காக 97 பேருடன் அகதிகள் படகு ஒன்று புறப்பட்டது. அதில் 90 பேர் அகதிகள். இதில் பெண்கள், கைக் குழந்தைகளும் அடங்குவர்.

இந்த படகு மலேசியாவில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் திடீரென கடலில் மூழ்கியது. இதைத் தொடர்ந்து கடலில் மூழ்கியோரை மீட்கும் பணியில் மலேசியா ஈடுபட்டது.

இதுவரை 31 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 66 பேரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

English summary
A boat carrying 97 people from Indonesia sank off the western coast of Malaysia and 66 of the passengers are still missing, the Malaysian Maritime Enforcement Agency said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X