பாகிஸ்தானில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்.. 4 பேர் பலி.. பலர் படுகாயம்!
பாகிஸ்தான் லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
இது ரம்ஜான் மாதம் என்பதால் உலகம் முழுக்க இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். அதிகாலையில் தொழுது நாள் முழுக்க உணவு அருந்தாமல் இவர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் தாதா தர்பார் மசூதிக்கு வெளியே மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற இருக்கிறது. இந்த தாதா தர்பார் மசூதி சூஃபி மக்கள் வழிபாடு நடத்தும் மசூதி ஆகும். இது ஆசியாவில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்று.
இதற்கு வெளியே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. முக்கியமாக அங்கு பாதுகாப்பிற்கு இருந்து போலீசார் குறி வைக்கப்பட்டு, இந்த தாக்குதல் நடந்துள்ளது. அதேபோல் இந்த பகுதி மக்கள் நெருக்கம் அதிகம் இருக்கும் இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் இதுவரை 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயர் வாய்ப்புள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை.