இங்கிலாந்தின் மற்றொரு நகரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பீதியில் மக்கள்
இங்கிலாந்தின் மற்றொரு நகரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
லண்டன்: மான்செஸ்டர் நகரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த நிலையில், மற்றொரு நகரான ஹீயுமில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன், மான்செஸ்டரில் பாப் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வெடிகுண்டு ஒன்று வெடித்தது.
இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, திடீரென தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 22 பேர் உயிரிழந்தனர். 59க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவரின் பெயரை தற்போது வெளியாகியுள்ளது. லிபியாவை பூர்வீகமாகக் கொண்ட சல்மான் ரமதான் அபேதி என்பவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், ஹீயும் என்ற நகரில் உள்ள ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ராணுவத்தினர் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.