ஆழமான ஏரிக்குள் விழுந்த நாய்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பிரேசில் அதிபரின் மனைவி
பிரேசில் நாட்டின் அதிபர் மைக்கேல் டெமரின் மனைவியும் அந்த நாட்டின் முதல் குடிமகளுமாகிய மார்சிலா தன்னுடைய வளர்ப்பு நாயை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து தண்ணீரில் குதித்துள்ளார்.
Recommended Video
ஸ்பெயின்: பிரேசில் நாட்டின் அதிபர் மைக்கேல் டெமரின் மனைவியும் அந்த நாட்டின் முதல் குடிமகளுமாகிய மார்சிலா தன்னுடைய வளர்ப்பு நாயை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து தண்ணீரில் குதித்துள்ளார்.
அரைகுறை நீச்சல் பயிற்சியுடன் அவர் வேகமாக தண்ணீரில் குதித்து அந்த நாயை காப்பாற்றி இருக்கிறார். இந்த விஷயம் பிரேசில் முழுக்க வைரல் ஆகியுள்ளது.
ஒரு அதிபரின் மனைவி இப்படி நாய் ஒன்றிற்காக உயிரை பணயம் வைத்ததை மக்கள் பாராட்டுகிறார்கள். இதெல்லாம் விளம்பரம் என்றும் சிலர் கிண்டல் செய்துள்ளார்.
நாய் குட்டி
அவர் தனது மகனுடன் அதிபர் பங்களாவில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர்களின் வளர்ப்பு நாய் பிக்கோலி, தோர் இரண்டும் அவர்களுடன் விளையாடி இருக்கிறது. அதில் பிக்கோலி நாய் அருகில் இருந்த ஏரிக்குள் குதித்து விளையாடி உள்ளது. அப்படி விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நீந்த முடியாமல் தத்தளிக்க தொடங்கியுள்ளது.
நீருக்குள் குதித்தார்
இதனைப் பார்த்தவுடன் மார்சிலா கொஞ்சம் கூட தாமதிக்கவில்லை. அப்படியே ஆழமான ஏரிக்குள் குதித்து நாயை நோக்கி வேகமாக சென்றார். அவருக்கு கொஞ்சம்தான் நீச்சல் தெரியும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் கஷ்டப்பட்டு நாயை மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளார். முக்கியமாக அந்த நாயை காப்பாற்றாத பாதுகாவலரை, மார்சிலா இடைநீக்கம் செய்து இருக்கிறார்.
கண்டிப்பு தெரிவித்தனர்
இதில் மார்சிலா அவரது பணியாளர்களுக்கு முக்கியமாக கட்டளை ஒன்றும் இட்டுள்ளார். அந்த சம்பவத்தை பார்த்த யாருமே இதை வெளியே சொல்ல கூடாது என்றுள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல் இறுதியில் நடந்து இருந்தாலும் இவ்வளவு நாட்கள் யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. தற்போது பிரேசில் செய்தி நிறுவனங்களுக்கு செய்தி கசிந்துள்ளது
கலவையான விமர்சனம்
இதை பல பேர் பாராட்டி இருக்கிறார்கள். இவ்வளவு ஏரிக்குள் குதித்து நாய் ஒன்றை காப்பாற்றிய தைரியத்தை பாராட்டி உள்ளனர். அதே சமயம் இதில் சிலர் கிண்டலும் செய்து இருக்கிறார்கள். வேண்டுமென்றே மார்சிலா இப்படி செய்து இருக்கிறார் என்றுள்ளார். விஷயம் வெளியே தெரிய கூடாது என்று கூறிவிட்டு அதை வெளியிட்டு விளம்பரம் தேடியுள்ளார் என்றும் கிண்டல் செய்துள்ளனர்.