அமேசான் காட்டில் தீயை அணைக்க உதவி கரம் நீட்டிய ஜி7 நாடுகள்.. வேண்டாம் என்ற பிரேசில் அரசு!
Recommended Video
பிரேசிலியா: அமேசான் காட்டின் தீயை அணைக்க ரூ 160 கோடி கொடுத்து உதவ ஜி7 நாடுகள் தயாராக இருந்த நிலையில் அவை தேவையில்லை என பிரேசில் அரசு உதறி தள்ளிவிட்டது.
அமேசான் காடானது பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. பிரேசிலில்தான் அதிகளவில் பரவி உள்ளது.
இந்த காட்டில் கடந்த சில நாட்களாக தீ பிடித்து எரிந்து வருகிறது. இந்த தீயை அணைக்க பிரேசில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் அது முடியவில்லை.
தீயை அணைக்கும் பணியில் 80000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரேசில் அரசு அந்நாட்டு ராணுவத்தையும் இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளது. விமானம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணிகள் செய்யப்படுகின்றன.
ஆயினும் தீயை அணைக்க முடியவில்லை. இந்த நிலையில் தீயை அணைக்க ரூ 160 கோடி நிதியுதவி அளிப்பதாக ஜி7 நாடுகள் அறிவித்தன. ஆனால் அவை தேவையில்லை என பிரேசில் தெரிவித்துவிட்டது.