For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுமியை பலாத்காரம் செய்த நபரை கட்டிவைத்து 'உறுப்பை' வெட்டிய உறவினர்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ரியோடி ஜெனிரோ: மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 66 வயது நபரை கட்டி வைத்து அவரது ஆணுறுப்பையும், விரல்களையும் வெட்டி எறிந்தனர், சிறுமியின் உறவினர்கள்.

பிரேசில் நாட்டின், செவரினியா என்ற பகுதியில் வசிப்பவர் பிரான்சிஸ்கோ டிசோசா காஸ்ட்ரோ (66). இவர் தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. வெளியே சென்ற சிறுமி காலதாமதமாக வீட்டுக்கு வந்ததை பார்த்த தாய், அதுகுறித்து கேட்டதற்கு, காஸ்ட்ரோ தன்னிடம் தவறாக நடந்துகொண்ட விஷயத்தை சிறுமி தெரிவித்துள்ளாள்.

இதை கேள்விப்பட்டதும், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த தாய் தனது உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். இதைக்கேட்டதும், கார்களில் வந்திறங்கிய உறவினர்கள் நேராக காஸ்ட்ரோ வீட்டுக்குச் சென்றுள்ளனர். அவரை அடித்து உதைத்து கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.

இதன்பிறகு கத்தியை எடுத்து அவரது ஆணுறுப்பை வெட்டி எறிந்தனர். அப்படியும் ஆத்திரம் குறையாமல், அந்த நபரின் மூன்று விரல்களையும் வெட்டி எறிந்துவிட்டு தப்பியோடிவிட்டனர். வலியால் அலறிக்கொண்டிருந்த காஸ்ட்ரோவை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரது ஆணுறுப்பையும், விரல்களையும் எடுத்துக் கொண்டு டாக்டர்களிடம் கொடுத்து மீண்டும் அதை உடலில் பொருத்துமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் டாக்டர்களோ, காலதாமதம் ஆகிவிட்டதால், எந்த உறுப்பையும் உடலில் பொருத்த முடியாது என்று கைவிரித்துவிட்டனர். ரத்தம் அதிகப்படியாக வெளியேறியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் காஸ்ட்ரோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

English summary
Vigilantes in Brazil hacked off a man's penis after suspecting him of raping a 3-year-old gir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X