வானத்திற்கு பிரிட்டன் அனுப்பிய ராட்சச வலை.. விண்வெளி குப்பைகளை அகற்றும் செயற்கைகோள்
விண்வெளியில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்வதற்காக பிரிட்டன் ஒரு செயற்கைக்கோளை அனுப்பி உள்ளது.
Recommended Video
நியூயார்க்: விண்வெளியில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்வதற்காக பிரிட்டன் ஒரு செயற்கைக்கோளை அனுப்பி உள்ளது.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இந்த செயற்கைக்கோளை பிரிட்டன் தயாரித்து இருக்கிறது. இந்த செயற்கைக்கோளுக்கு ''ரிமூவ்டேப்ரீஸ்'' (RemoveDEBRIS) என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
விண்வெளியில் இருக்கும் செயற்கைகோள் குப்பைகளை இது விரைவில சுத்தம் செய்ய உள்ளது. இது முதற்கட்டமாக சில சோதனைகளை நடத்த உள்ளது.
பிரச்சனை
விண்வெளியில் மனித குப்பைகள் நிறைய இருக்கிறது. நாம் அனுப்பிய செயலிழந்த செயற்கைகோள்கள், உடைந்த செயற்கோள், விமான பாகங்கள், பல ஆராய்ச்சி பாகங்கள் என விண்வெளி முழுக்க நிறைந்து இருக்கிறது. இதனால் இன்னும் சில வருடங்களில் விண்வெளி மிகப்பெரிய குப்பை கூளமாக மாறும் என்று நாசா தெரிவித்துள்ளது.
பிரிட்டன் ஆராய்ச்சி
இதை அகற்றுவதற்கு நாசா பல நாட்களாக யோசித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிரிட்டன் முதல் முறையாக களமிறங்கியுள்ளது. இதற்காக ''ரிமூவ்டேப்ரீஸ்'' (RemoveDEBRIS) செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. இந்த செயற்கைகோள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் அனுப்பப்பட்டு இருக்கிறது.
எப்படி செயல்படும்
இதில் பெரிய தூண்டில் போன்ற வலை இருக்கும். இந்த வலை விண்வெளியில் உள்ள குப்பைகளை மொத்தமாக பிடித்து பூமிக்கு எடுத்து வரும். இந்த வலை சிறப்பு, கலப்பு உலோகம் மூலம் வேகமாக விண்வெளியில் சுற்றும் குப்பைகளை பூமிக்கு கொண்டு வரும். இந்த குப்பைகள் துப்பாக்கியில் இருந்து வெளியே வரும் குண்டுகள் வேகத்தில் சுற்றிக்கொண்டு இருக்கு என்று கூறப்படுகிறது.
விரைவில்
இதனால் அந்த குப்பைகளை பூமிக்கு கொண்டு வருவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் இப்போது இந்த செயற்கைகோள் முதற்கட்ட சோதனைகளை மட்டுமே செய்யும்.சில சிறிய பொருட்களை மட்டுமே அது பூமிக்கு கொண்டு வரும். பூமியின் பாதையை நுழைந்த வுடன் அந்த குப்பை எரிந்து நாசமாகிவிடு என்பதால் இந்த முறை எளிதாக இருக்கும்.