டேக்-ஆப் நேரத்தில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் தீ.. அலறியடித்து ஓடிய 14 பயணிகள் காயம்
லண்டன்: லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பயணிகள் கடும் பீதியடைந்து தப்பியோடினர். இதில் 14 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
லாஸ் வேகாசில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிஸ் 777 வகை விமானத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. விமானம் டேக்-ஆப் ஆகும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் உடனடியாக விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டது.
Just landed in Vegas to see this...plane on fire on the Tarmac...people still onboard and running off! pic.twitter.com/ul10hFFw9j
— David L. Somers (@DL_Somers) September 8, 2015
அச்சத்தின் காரணமாக, பயணிகள் அலறியடித்து, அவசர வழிகளின் வழியாக வெளியே ஓடினர். சிலர் ஜன்னல் வழியாக குதித்தனர். இந்த களேபரத்தில் 14 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விமானத்தில் மொத்தம் 172 பயணிகள் இருந்தனர்.
1998ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விமானம், இதுவரை நல்ல நிலையில்தான் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடக்கிறது.