உதவிக்கு ஏங்கும் மக்கள்.. இரக்கம் காட்டாத காட்டுத் தீ.. கலிபோர்னியா வாசிகளின் கதறல்
கலிபோர்னியாவில் ஏற்பட்டு இருக்கும் 6 காட்டுத் தீக்களின் காரணமாக அங்கு உள்ள மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் ஏற்பட்டு இருக்கும் 6 காட்டுத் தீக்களின் காரணமாக அங்கு உள்ள மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் போதிய அளவில் உதவிகள் வழங்கப்படவில்லை.
இந்த வருடத்தில் மே மாதத்தில் இருந்தே கலிபோர்னியா பகுதி பெரிய அளவில் காட்டுத் தீ காரணமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டு இருக்கும் 6 காட்டுத் தீக்கள் அந்த மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கிறது.
தற்போது அந்த பகுதி மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர முயற்சி எடுத்தாலும் இன்னும் பலர் உதவி இன்றி தவித்து வருகின்றனர். சமூக வலைத்தளம் எங்கும் இவர்களின் உதவிக் குரல் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
|
கண்ணெதிரே
கலிபோர்னியாவில் ஏற்பட்டு இருக்கும் தாமஸ் காட்டுத் தீ, சூசன் என்ற பெண்ணின் வீட்டை சூழ்ந்து இருக்கிறது. இந்த நிலையில் அவர் கண்ணுக்கு எதிராகவே அவர் வசித்த வீட்டின் நிலத்தை காட்டுத் தீ பொசுக்கி இருக்கிறது. சரியான நேரத்தில் வந்த கலிபோர்னியா தீயணைப்பு படை கஷ்டப்பட்டு தீயை வெற்றிகரமாக அணைத்து இருக்கிறது. அந்த பெண் கண்ணீருடன் தீ அணைப்பு படை செல்வதை பார்க்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
|
இதுவே அதிகம்
இந்த நிலையில் தற்போது அங்கு உருவாகி இருக்கும் 6 காட்டுத் தீ குறித்து இவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் "கலிபோர்னியாவில் தற்போது காட்டுத் தீ ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஐந்து வருடம் இல்லாத அளவுக்கு இந்த வருடத்தில் காட்டுத் தீ ஏற்பட்டு விட்டது. ஏற்கனவே பாதி பகுதிகள் அழிந்துவிட்டது. இந்த நிலையில் இந்த தீ கால நிலையிலேயே மாற்றத்தை உருவாக்கும்'' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
|
வந்துவிட்டது
தன் ஊருக்குள் வந்து இருக்கும் காட்டுத் தீ குறித்து இந்த பெண் எழுதி இருக்கிறார். அதில் "என் ஊருக்குள் காட்டுத் தீ வந்துவிட்டது. எனக்கு அழுகையாக வருகிறது. என் உறவுக்காரர் ஒரு வீடியோ அனுப்பி இருந்தார். அதில் மந்தைக்குள் குதிரைகளை மாட்டிக் கொண்டு தவிக்கிறது. எனக்கு அதை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் வசிக்கும் இடத்தில் ஏற்கனவே தீ வந்துவிட்டது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
கொத்தாக இறந்த குதிரைகள்
இந்த நிலையில் இந்த தீயால் மனிதர்கள் மட்டும் இல்லாமல் நிறைய விலங்குகளும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. நேற்று குதிரைகள் பாதுக்காப்பாக வைக்கப்பட்டு இருந்த இடத்தில் தீ பரவியது. இதன் காரணமாக 100க்கும் அதிகமான பந்தய குதிரைகளும், வளர்ப்பு குதிரைகளும் இறந்து போய் இருக்கின்றது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பலரும் விலங்குகளை பாதுகாக்க கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.