கனடாவில் பாதசாரிகள் கூட்டத்தில் டிரக் மோதி விபத்து- 9 பேர் பலி; 16 பேர் படுகாயம்
கனடாவில் பாதசாரிகள் கூட்டத்தில் டிரக் மோதி 9 பேர் பலி.
டொரண்டோ: கனடாவில் பாதசாரிகள் கூட்டத்தில் மர்ம நபர் டிரக்கை மோதவிட்டதில் 9 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிள் பாதசாரிகள் கூட்டத்துக்குள் திட்டமிட்டு வாகனங்களை மோதவிட்டு படுகொலை செய்வது ஐஎஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கை. இதேபோல் ஒரு சம்பவம் கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்றுள்ளது.
டொரண்டோவில் நேற்று பிற்பகலில் திடீரென பாதசாரிகள் கூட்டத்துக்குள் டிரக் ஒன்று வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த டிரக்கை ஓட்டி வந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் டொரண்டோவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
A truck ran over pedestrians after jumping the curb in #Toronto, injuring approximately 10 people, the local police confirmed. #torontoattack
— ANI Digital (@ani_digital) April 23, 2018
Read @ANI story | https://t.co/bxH8w3xJiO pic.twitter.com/hkGPnel763