For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்ப்பிணிப் பெண், 10 மாத மகள் கரடி கடித்துப் பலி.. வாக்கிங் சென்ற போது பரிதாபம்!

கர்ப்பிணி பெண் மற்றும் மகளை கரடி கடித்து கொன்ற சம்பவம் கனடாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்ப்பிணிப் பெண், 10 மாத மகள் கரடி கடித்துப் பலி

    ஒட்டாவா: கனடாவில் வாக்கிங் சென்ற கர்ப்பிணிப் பெண்ணையும், அவரது பெண் குழந்தையையும் கரடி கடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கனடா நாட்டில் மயோ என்ற இடத்தை சேர்ந்த ரோசட் என்பவது மனைவி வலேரியா (37). இந்தத் தம்பதிக்கு அடேல் என்ற 10 மாத பெண் குழந்தை இருந்தது. பள்ளி ஆசிரியையான தற்போது மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.

    canada maternity leave woman and baby killed by bear

    நிறைமாதக் கர்ப்பிணியான அவர் பிரசவத்திற்காக விடுமுறை எடுத்து, மலைப் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று அவர் தனது மகளுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென வலேரியா மற்றும் அவரது மகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், தாய், மகள் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு ஒடி வந்த ரோசட், கரடியை துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த கரடி உயிரிழந்தது.

    ஆனால், கரடி கடித்ததில் படுகாயமடைந்த வலேரியாவும், அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    ரோசட் தங்கியிருந்த பகுதி கிரேசிலி இன கரடிகள் அதிகம் வாழ்ந்து வரும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A woman and her baby have been killed in a suspected bear attack in Canada's Yukon Territory, says a coroner.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X