ஈரான் விமான விபத்து சந்தேகம் தருகிறது.. களமிறங்கினார் ஜஸ்டின் ட்ரூடோ.. விசாரணை செய்யும் கனடா!
ஈரானில் நேற்று உக்ரைன் விமானம் வெடித்து சிதறி கீழே விழுந்தது வெறும் விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்று உக்ரைன் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: ஈரானில் நேற்று உக்ரைன் விமானம் வெடித்து சிதறி கீழே விழுந்தது வெறும் விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்று உக்ரைன் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதலால் இந்த விமானம் விழுந்து இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது.
ஈரான் அமெரிக்கா இடையில் தற்போது போர் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா ஆகிய நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரானில் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணித்த 170 பேரும் பலியானார்கள். டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது. இந்த விமானம் உக்ரைன் அரசுக்கு சொந்தமான உக்ரைனியன் சர்வதேச ஏர்லைனர் விமானம் ஆகும்.
நினைத்த நேரத்தில் ஈரானை தாக்க முடியாது.. டிரம்ப்பை லாக் செய்த அமெரிக்க நாடாளுமன்றம்.. என்ன நடந்தது?
என்ன சந்தேகம்
ஈரானில் உக்ரைன் விமானம் இப்படி விழுந்து நொறுங்கியது குறித்து பல நாடுகள் சந்தேகம் எழுப்ப தொடங்கி உள்ளது. இது தொடர்பாக முதலில் உக்ரைன் நாடுதான் சந்தேகம் தெரிவித்தது. ஈரான் செலுத்திய ஏவுகணை காரணமாக எங்கள் விமானம் விழுந்து இருக்கலாம் என்று கூறியது.
அதே நேரம்
ஈரான் ராக்கெட்டை ஏவிய அதே நேரத்தில்தான் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தது சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இதனால் ஈரான் அனுப்பிய ராக்கெட் மோதி, இந்த விமானம் விழுந்து இருக்கலாம் என்று பலரும் கூறினார்கள்.
யார் சொன்னார்கள்
உக்ரைனை தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் இதே சந்தேகத்தை எழுப்பியது. நேற்று அமெரிக்கா அதிபர் டிரம்பும் இதை பற்றி.குறிப்பிட்டார். உக்ரைன் விமானம் விபத்துக்கு உள்ளானது போல தெரியவில்லை. இதற்கு பின்னால் எதோ தவறு நடந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
என்ன உதவி
இந்த விமான விபத்து தொடர்பாக தற்போது உக்ரைன் அரசு, கனடாவின் உதவியை நாட உள்ளது. பொதுவாக விமான விபத்து தொடர்பான ஆராய்ச்சிகள், விசாரணைகளை கனடா அரசுதான் அதிகமாக நடத்தும். அவர்களிடன் இதில் பலர் தொழில்நுட்ப பிரிவினர் உள்ளனர். அதனால் கனடா அரசிடம் உதவி கேட்க உக்ரைன் முடிவு செய்துள்ளது.
என்ன கூறினார்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எங்களுக்கு இந்த விபத்து தொடர்பாக சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக நாங்கள் விசாரிப்போம். இதற்காக எங்கள் நிபுணர் குழுவை அனுப்ப உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் உக்ரைன் விமான விபத்து பெரிய பிரச்சனையாக தொடங்கி உள்ளது.