மயக்க மருந்து கொடுத்து 21 பெண் நோயாளிகளைக் கற்பழித்த கனடா மருத்துவர்
ஒட்டாவா: ஆபரேஷன் தியேட்டரில் வைத்து மயக்க மருந்து கொடுத்து பெண் நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப் பட்ட கனடா டாக்டரின் குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளது.
கனடாவின் டொரன்டோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராகப் பணியாற்றி வந்தவர் ஜார்ஜ்தூட் நாட். இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளிகளுக்கு ஆபரேசன் தியேட்டரில் மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுபோன்று கிட்டத்தட்ட 21 பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் ஜார்ஜ்.
அரைமயக்க நிலையில், அவரை எதிர்த்துப் போராட இயலாத பெண்கள், மயக்கம் தெளிந்த பின்னர் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு ஜார்ஜ் கைது செய்யப் பட்டார்.
ஜார்ஜ் மீதான வழக்கு ஒண்டாரியோ கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நீதிபதி டேவிட் மிக்கோம்ப் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், ஜார்ஜ் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது நிரூபணமானது. அதனைத் தொடர்ந்து ஜார்ஜ்ஜை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.
மேலும், வரும் டிசம்பரில் ஜார்ஜ்க்கான தண்டனை விவரம் தெரிவிக்கப் படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.