பூகம்பத்தால் ஊஞ்சலாடிய அலங்கார விளக்கு.. துபாயிலும் உணரப்பட்ட நிலநடுக்கம் #dubai
நிலநடுக்கம் ஏற்பட்டதால் துபாயில் ஒரு வீட்டில் சீலிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கும் அலங்கார விளக்கு ஊஞ்சலாடத் தொடங்கியது.
Recommended Video
துபாய்: ஈராக்- ஈரான் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது துபாயில் ஒரு வீட்டின் சீலிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கும் அலங்கார விளக்கு ஊசலாடத் தொடங்கியது.
ஈராக்கின் ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு அலறி அடித்துக் கொண்டு வந்தனர்.
கட்டடங்கள் சரிந்து விழுந்த விபத்தில் 135 பேர் பலியாகிவிட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலநடுக்கமானது துபாய், குவைத், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.
|
துபாயில் நிலநடுக்கம்
துபாயில் ஒரு வீட்டின் மேலே தொங்க வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்கு ஊஞ்சலாடியது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதுபோல் துபாயில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து வலைஞர்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
|
புதுமையான உணர்வு
துபாயில் நிலநடுக்கங்கள், நிலஅதிர்வுகள் ஏற்படுவது மிகவும் அரிது. இந்த நிலநடுக்கம் தனக்கு புதுமையான உணர்வை அளித்துள்ளது என்கிறார் இந்த வலைஞர்..
|
பல்வேறு நாடுகளில்...
பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. துபாயிலும் உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன என்று ஒரு கட்டடம் சரியும் படத்தை வெளியிட்டுள்ளார் இந்த வலைஞர்.
|
10 வினாடிகள் நீடித்த நிலநடுக்கம்
துபாயில் 7 முதல் 10 வினாடிகள் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
|
மிகவும் பெரிய விஷயம்
துபாயில் 10-ஆவது மாடியில் நிலநடுக்கம் உணரப்பட்டது மிகவும் பெரிய விஷயம் என்கிறார் இந்த நெட்டிசன்.