காதலியின் உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்துச் சாப்பிட்ட "திகில் பாண்டி"
சிட்னி: ஆஸ்திரேலியாவில் தனது காதலியின் உடலை வெட்டி துண்டு துண்டாக்கி அதை சமைத்தும் சாப்பிட்டுள்ளார் ஒரு நபர். பின்னர் அவரும் தற்கொலை செய்து விட்டார். இதுகுறித்து ஆஸ்திரேலிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிட்னியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் மனித உடல்களின் மிச்சம் கிடந்ததை அண்டை வீட்டில் வசிப்போர் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனையிட்டபோது அடுப்பில் மனித உடல் பாகங்களை சமைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியபோது அந்த வீட்டில் வசித்து வந்த நபர்தான் தனது காதலியைக் கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்டுள்ளார் என்று தெரிய வந்தது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் டாம் ஆர்மிட் என்பவர் கூறுகையில் தகவல் கிடைத்து நாங்கள் வந்தோம். வீட்டில் ஒரு பெண்ணின் உடலை சமைத்திருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டுக்கு அருகே ஒருவரின் உடலும் கிடந்தது. அந்த நபர்தான் இந்த வீட்டில் வசித்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவர்தான் தனது காதலியைக் கொலை செய்து தானும் தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது என்றார்.
மேலும், தற்கொலை செய்து கொண்ட அந்த நபரின் வயது 28 இருக்கும் எனவும், கப்பல்களில் சமையல்காரராக பணியாற்றி வந்தவர் சமீபத்தில்தான் தனது இந்தோனேசிய நாட்டுக் காதலியுடன் இங்கு குடி வந்தார் எனவும் அக்கம்பக்கத்தார் தெரிவித்துள்ளனர்..
காதலியை கொலை செய்த பின்னர் தனது தொண்டையைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார் அந்நபர்.