சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு: பெண் டாக்டர், போலீஸ்காரர் உள்பட 3 பேர் பலி
Recommended Video
சிகாகோ: சிகாகோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகினர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மெர்சி மருத்துவமனைக்கு திங்கட்கிழமை வந்த நபர் கார் நிறுத்தும் இடத்தில் டாக்டர் தமாரா ஓ நீல் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தமாராவை சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேய பலியானார். இதையடுத்து அந்த நபர் மருத்துவமனைக்குள் நுழைந்து சுடத் தொடங்கினார். இதில் மருத்துவமனை ஊழியை மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் மீது குண்டு பாய்ந்தது.
#LIVE: Reports of multiple victims after shots fired in area of #Mercy Hospital in #Chicago https://t.co/IU4qRkJM79
— Jamie Rye (@tayho1977) November 19, 2018
இருவருமே பலியாகிவிட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபரை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த நபர் உயிர் இழந்தார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனை என்றும் பார்க்காமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியவர் டாக்டர் தமாராவின் முன்னாள் காதலர் என்பது தெரிய வந்துள்ளது.