அடேய் இதுக்குள்ள போய் என்னடா பன்ற... இதுஎன்ன சரக்காமர விளையாட்டுனு நெனச்சியா!
Recommended Video
பெய்ஜீங்: சீனாவில் ஒரு ரயில் நிலையத்தில் உடைமைகளை சோதனையிடும் ஸ்கேனர் கருவியில் சிறுவன் ஒருவன் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினான்.
தெற்கு சீனாவில் ஸியாவ்லான் ரயில் நிலையம் உள்ளது. இங்கு கடந்த வாரம் ஒரு தந்தையும் ஒரு சிறுவனும் வந்தனர். அப்போது அந்த தந்தை தனது உடைமைகளை சோதனை செய்ய ஸ்கேனரில் பைகளை வைத்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஸ்கேனரில் சிறுவனும் ஏறிக் கொண்டான். இதையறியாமல் அந்த தந்தை தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றவுடன் சிறுவனை காணாது தவித்தார்.
Child sneaks into X-ray machine at security check in south China pic.twitter.com/qeOovAO4Wn
— CGTN (@CGTNOfficial) October 17, 2018
உடனே திரும்பவும் பாதுகாப்பு சோதனை அருகே வந்து எங்கே எனது மகன் என்று தேடினார். ஸ்கேனரில் அந்த பையன் இருப்பதை அதிகாரி பார்த்துவிட்டார். அதற்குள் அந்த குட்டி பையன் ஸ்கேனரின் மறுபக்கத்திலிருந்து வந்தான். தந்தையும் நிம்மதி பெருமூச்சு விட்டார். இதுபோல் ஸ்கேனரில் மனிதர்கள் நுழைந்தால் எவ்வித பாதிப்பும் இல்லாதபோதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
இதுபோல் சில மாதங்களுக்கு முன்னர் டாங்குவான் என்ற பகுதியில் ஒரு பெண்ணின் பைகளை ஸ்கேனரில் வைக்க சொன்னபோது அவரும் ஸ்கேனரில் சென்றார். பின்னர் ஏன் அதனுள் சென்றீர் என கேட்டதற்கு தனது பையில் உள்ள பொருட்களை உள்ளே இருந்து கொண்டு யாராவது திருடுகிறார்களா என பார்ப்பதற்காக உள்ளே சென்றதாக கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.