சிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
சாண்டியாகோ: சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது... இது ரிக்டர் அளவுகோளில் 6.0-ஆக பதிவாகியுள்ளது.
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று.. இங்குள்ள மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஓவல்லே பகுதியில் சில தினங்களுக்கு முன்புகூட நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், இன்று இரவு 8:23 மணியளவில் சிலியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.. இது ரிக்டர் அளவு கோளில் 6.0-ஆக பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
சில நிமிடங்கள் நீடித்த அந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்தன.. இதனால் அச்சம் கொண்ட மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். இந்த பகுதியில் உள்ள மின்சார சேவைகள் துண்டிக்கப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.. அதே சமயத்தில் பெரிய அளவில் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பதும் உடனடியாக தெரியவில்லை.
கொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்!
சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவுமில்லை. சிலி, பசிபிக் பெருங்கடலில் உள்ள ரிங் ஆப் பயர் என்ற பகுதியில் உள்ளது.. இந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம், மற்றும் எரிமலை வெடிப்பால் பாதிப்புக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது