சிலி நாட்டில் நிலச்சரிவால் சிதைந்து போன கிராமம்
தென் சிலியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
அங்கு சுற்றுலா வாசிகளிடையே பிரபலமான ஏரிப்பகுதியில் உள்ள வில்லா சான்டா லூசியா என்ற கிராமத்தில் 15 பேர் காணாமல் போயுள்ளனர்.
அதனால் அப்பகுதியில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் மீச்செல் பச்செலட்.
- சிலி: நெருப்பும் பனியும் நிறைந்த புவியியல் அற்புதம்
- பென்குயின்களை பாதுகாக்க இரும்பு சுரங்க அகழ்வை நிராகரிக்கும் சிலி
ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவிப்பதோடு, நாட்டின் மற்ற பகுதிகளுடனான தொடர்பையும் இழந்துள்ளனர்.
"லூசியா கிராம மக்கள் பாதுகாபுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு மீட்புக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாக" அதிபர் பச்செலட் தெரிவித்தார்.
சிலி தலைநகர் சான்டியாகோவின் தெற்கில் சுமார் 1,100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம். கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இக்கிராமத்தில் உள்ள பள்ளத்தாக்கின் ஒரு பகுதி முழுவதும், சுற்றியுள்ள மலைகளில் இருந்த பெருமளவு மண்ணால் சூழப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் எப்போதும் இல்லாத அளவிற்கு கனமழை பெய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானம் மூலம் காப்பாற்றப்பட்ட டஜன் கணக்கான மக்கள், அருகில் உள்ள சைட்டன் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உயிர்பிழைத்திருப்பவர்களை, மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட இந்த கிராமம், கொர்கொவாடூ தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ளது. இங்குள்ள எரிமலைகள், கடற்பகுதிகள் மற்றும் காடுகள் சுற்றுலா வாசிகள் இடையே மிகவும் பிரலமானதாகும்.
பிற செய்திகள்
- விண்ணில் பறக்கும் தட்டுகள்: ரகசிய விசாரணை நடத்திய அமெரிக்கா
- கலிஃபோர்னியாவின் மூன்றாவது பெரிய காட்டுத்தீ இதுதான்!
- பிபிசி தமிழ் புகைப்பட போட்டி : மூன்றாவது வாரத்துக்கான தலைப்பு இதோ !
- ராமர் பாலத்தில் யாராவது எப்போதாவது நடந்திருக்கிறார்களா?
- 6.4 லட்சம் டாலர்களுக்கு ஏலம்போன ரோமங்கள் உள்ள யானை எலும்புக்கூடு