பாகிஸ்தான் குடியரசு தினம்.. அணிவகுப்புக்கு சென்ற சீன போர் விமானங்கள்
பெய்ஜீங்: பாகிஸ்தான் குடியரசு தினத்தையொட்டி அணிவகுப்பிற்காக சீன போர் விமானங்கள் இஸ்லாமாபாத் சென்றுள்ளது.
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கொண்டு வந்தன.
இதற்கு அந்த கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான சீனா முட்டுக்கட்டை போட்டது. இது நான்காவது முறை ஆகும். இந்த நிலையில் பாகிஸ்தான் தினம் வரும் மார்ச் 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தனி பாகிஸ்தான் அமைய காரணமாக இருந்த தீர்மானம் கையெழுத்தானதை நினைவுக்கூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி விமானங்களின் அணிவகுப்புகள் நடத்தப்படும். இந்த ஆண்டு துருக்கியின் எஃப் 16 ரக விமானங்கள் சீனாவின் ஜே 10 ரக விமானங்கள் பறக்கவிருக்கின்றன. இதற்காக சீன நாட்டு விமானங்கள் இஸ்லாமாபாதுக்கு சென்றுள்ளன.