வித்தை காட்டிய போது விபரீதம்.. சர்க்கஸ் மாஸ்டரின் கழுத்தை இறுக்கிக் கொன்ற பெரிய பாம்பு!
மாஸ்கோ: ரஷ்யாவில் பாம்பை வைத்து வித்தை காட்டிய சர்க்கஸ் மாஸ்டர் ஒருவர், அதே பாம்பால் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு ரஷ்யாவில் ஒரு வீடியோ வேகமாக பரவியது. அந்த வீடியோவில், ஒரு சர்க்கஸ் மாஸ்டர், ஒரு மலை பாம்பை வைத்து வித்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.
பாம்பை தனது கழுத்தை சுற்றி இருக்க, அதன் தலையை கையில் பிடித்திருக்கிறார் சர்க்கஸ் மாஸ்டர். திடீரென சரிந்து கீழே விழுகிறார். தனது வலது கையால், தனக்கு நேர்ந்த ஆபத்து குறித்து சமிஞ்யை செய்கிறார்.
இதையடுத்து, அந்த சர்க்கஸில் உள்ள மற்றவர்கள், ஓடிவந்து அந்த பாம்பை சர்க்கஸ் மாஸ்டரின் கழுத்தில் இருந்து விடுவிக்கின்றனர். இருப்பினும் அவர் சுயநினைவு இல்லாமல் தரையில் சரிந்து கிடக்கிறார்.
உலகிலேயே முதன்முறையாக.. அமெரிக்காவில் ட்ரோன் மூலம் பறந்த சிறுநீரகம்!
இந்த வீடியோ அந்நாட்டின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஊடகங்களின் செய்திபடி, இந்த சம்பவம் நடந்தது தெற்கு ரஷ்யாவின் டாகஸ்தான் என்பது தெரியவந்துள்ளது.
பாம்பினால் தாக்கப்பட்ட அந்த சர்கஸ் மாஸ்டர் உயிர் பிழைத்தாரா இல்லை மரணமடைந்துவிட்டரா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. காரணம். இதுபோன்ற ஒரு சம்பவம் இங்கு நடைபெறவே இல்லை என டாகஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர.
இருப்பினும் ஊடகங்களின் அறிக்கைப்படி, அந்த சர்கஸ் மாஸ்டர் உயிரிழந்துவிட்டதாகவே தெரிகிறது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.