விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் அணிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சொன்ன நச் வாழ்த்து!
Recommended Video
இஸ்லாமாபாத்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சாதனை வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமரை இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். எனவே இந்த வெற்றி உலக கோப்பையை விட மகத்தானது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.
முதல் ஆசிய அணி
அது மட்டுமின்றி ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதும், இதுதான் முதல்முறை என்பது அந்த சிறப்புக்கு மேலும் ஒரு மகுடம் வைத்தது போன்றது ஆகும். இந்த நிலையில்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ட்விட்டர் பக்கத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
|
இம்ரான் கான்
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசியாவை சேர்ந்த ஒரு அணி ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்கு, விராட் கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்
இம்ரான் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் புகழ்பெற்ற வீரராக இருந்தவர் ஆகும். அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி, உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில்தான் இந்திய அணிக்கு மனமுவந்து பாராட்டு தெரிவித்துள்ளார் இம்ரான்கான்.
பாராட்டுகள்
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பின்னூட்டத்தில், இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர். சமாதானத்திற்கான ஒரு தூதர் என்று அவர்கள் இம்ரான் கானுக்கு பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.