கொரோனா.. இது முதல் அலைதான்.. வரப்போகுதாம் மிகப் பெரிய அலை... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!
ஜெனிவா: உலக நாடுகள் தற்போது எதிர்கொண்டிருப்பது கொரோனாவின் முதல் அலை; இனி மிகப் பெரிய அலை வரும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அதிகாரியான மார்க்ரெட் ஹாரிஸ் (Margaret Harris) ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலக நாடுகள் அனைத்தும் முதல் கட்ட கொரோனா அலையில்தான் உள்ளோம். இன்னொரு மிகப் பெரிய அலையாக இது மாற்றம் அடையும். கொரோனா பாதிப்பு என்பது மேலும் அதிகரிக்கும்.
இன்று ஒன்றும் சீசன் கால தொற்றுநோய் அல்ல. அமெரிக்காவின் கோடை காலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
அதிஉச்சபட்சம்-ஆந்திராவில் ஒரே நாளில் 7,948 பேருக்கு கொரோனா- இந்தியாவில் 15 லட்சத்தை கடந்தது பாதிப்பு
கொரோனா வைரஸ் என்பதை அனைத்து காலநிலைகளையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
இவ்வாறு மார்க்ரெட் ஹாரிஸ் கூறியுள்ளார்.