சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 2,835 ஆக உயர்வு
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை 2,835 உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான வுகானில் இருந்து நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. சீனாவை மட்டுமின்றி உலகம் முழுமையும் கடுமையாக இந்த வைரஸ் நோய் பரவி வருகிறது.
ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.
சீனாவில் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவிய இந்த நோய் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போது ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.
எங்கே பரவ கூடாது என்று நினைத்தார்களோ.. அங்கேயே வந்துவிட்டது.. 'ஹு'விற்கு கொரோனா கொடுத்த ஷாக்!
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,251 ஆக உயர்ந்துள்ளது.