For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேரமாக நேரமாக பரவும்.. ஜப்பான் கப்பலில் மேலும் 10 பேருக்கு கொரோனா.. நடுக்கடலில் திக் திக் நிமிடங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    திடீர் வேகமெடுத்தது கொரோனா... பலி எண்ணிக்கையும் உயர்ந்தது | Coronavirus beats Sars in China

    டோக்கியோ; கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உள்ள மேலும் 10 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் கப்பல் ஒன்று நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஆகும் இது.

    ஜப்பான் வந்த அந்த கப்பலில் இருந்த ஒருவருக்கும் வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 80 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்துள்ளது.

    சீனாவில் கைமீறிய கொரோனா.. 570ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. 28000 பேர் பாதிப்பு.. ஒரே நாளில் 73 பேர் பலி! சீனாவில் கைமீறிய கொரோனா.. 570ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. 28000 பேர் பாதிப்பு.. ஒரே நாளில் 73 பேர் பலி!

    எப்படி கப்பல்

    எப்படி கப்பல்

    இந்த கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டயமண்ட் பிரின்சஸ் என்பது இந்த கப்பலின் பெயர். முதலில் ஒருவருக்குதான் இந்த வைரஸ் தாக்குதல் இருந்தது. நேற்று இந்த வைரஸ் 10 பேருக்கு பரவியது. இன்று இன்னும் 10 பேருக்கு பரவி உள்ளது. மொத்தம் 21 பேருக்கு வைரஸ் தாக்குதல் உள்ளது. இவர்கள் எல்லோரும் அங்கே தனி அறையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    எல்லோரும்

    எல்லோரும்

    ஆனாலும் இந்த வைரஸ் எதோ ஒரு வகையில் எல்லோருக்கும் பரவி வருகிறது. நேரம் ஆகஆக இவர்களுக்கு வைரஸ் தாக்குதல் பரவிக்கொண்டே இருக்கும். உள்ளே இருப்பவர்களுக்கு அங்கு இருக்கும் ஊழியர்கள்தான் உணவு கொடுக்க வேண்டும். அதனால் எப்படியாவது ஒருவரை ஒருவர் தொட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதேபோல் கப்பலில் கண்டிப்பாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு எளிதாக வைரஸ் பரவ முடியும்.

    நேரம் ஆனது

    நேரம் ஆனது

    இதனால் அங்கு நேரம் ஆகஆக வைரசால் பலர் தாக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு போதிய மருந்து வசதிகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நோய் தொடுதல் மூலம் பரவக்கூடியது ஆகும். அதேபோல் நோய் தாக்குதல் உள்ளவர்கள் தொட்ட பொருளை மற்றவர் தொட்டாலும் இந்த வைரஸ் பரவும். ஜப்பான் மருத்துவர்கள் கரையில் இருந்து சென்று அங்கு சிகிச்சை அளித்து திரும்பி வருகிறார்கள்.

    வாய்ப்பில்லை

    வாய்ப்பில்லை

    தற்போது அந்த கப்பல் நடுக்கடலில் தத்தளித்து வருகிறது. இந்த கப்பலை கண்டிப்பாக தங்கள் எல்லைக்குள் விட முடியாது என்று ஜப்பான் கூறிவிட்டது. எங்களால் இந்த வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது.அதனால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்றுள்ளனர். அவர்களால் தற்போது திரும்பியும் போக முடியாது. இதனால் 3500 பேரின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Coronavirus: 10 more passengers confirmed with the attack in the quarantined Japan cruise ship.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X