For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதைபதைக்கும் மக்கள்.. தோல்வி அடைந்த முயற்சிகள்.. சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1662 ஆனது!

சீனாவில் கொரோனா தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 1,662 ஆக அதிகரிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    coronavirus:A timeline of the COVID-19 outbreak

    பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 1,662 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68786 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.

    இந்தியாவில் கேரளாவில் ஏற்கனவே மூன்று பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மொத்தம் மூன்று பேர் இந்த வைரஸ் தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஒருவர் கொஞ்சம் குணமடைந்து இருக்கிறார்.

    வண்ணாரப்பேட்டையில் 3வது நாளாக தொடரும் போராட்டம்.. பெருகும் ஆதரவு.. போலீஸ் குவிப்பு.. பதற்றம்! வண்ணாரப்பேட்டையில் 3வது நாளாக தொடரும் போராட்டம்.. பெருகும் ஆதரவு.. போலீஸ் குவிப்பு.. பதற்றம்!

    எப்படி நடக்கிறது

    எப்படி நடக்கிறது

    இந்த நிலையில் சீனா இந்த பலி எண்ணிக்கை குறித்து பல விஷயங்களை மறைகிறது என்று புகார் எழுந்துள்ளது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் பலி எண்ணிக்கையே உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. அங்கு இதைவிட அதிகமான நபர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். சீன அரசு இந்த நோய் தாக்குதலில் பெரிய அளவில் தோல்வி அடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா எப்படி

    அமெரிக்கா எப்படி

    கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவையும் தாக்கி உள்ளது. ஆம் அமெரிக்காவில் இந்த கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு சேர்ந்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டது. உலகம் முழுக்க 22 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. அதேபோல் ஐரோப்பா , ஜப்பானில் ஒருவர் இதனால் பலியாகி உள்ளனர்.

    என்ன எண்ணிக்கை

    என்ன எண்ணிக்கை

    சீனாவில் கொரோனா தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 1,662 ஆக அதிகரிப்புகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68786 ஆயிரத்தை தாண்டியுள்ளது.உலகம் முழுக்க இந்த வைரஸ் காரணமாக 69000 பேர் பலியாகி இருக்கிறார்கள். சீனாவில் நேற்று மட்டும் 200 பேருக்கு இந்த வைரஸ் ஏற்பட்டது. சீனாவில் நேற்று மட்டும் 142 பேர் இந்த வைரஸ் மூலம் பலியானார்கள்.

    உதவி கேட்கிறது

    உதவி கேட்கிறது

    சீனா இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஒப்புக்கொண்டு இருக்கிறது. எங்களால் வைரஸ் பரவுவதை தடுக்க முடியவில்லை. வைரசுக்கு எதிராக செய்ய வேண்டியதை எல்லாம் செய்து பார்த்துவிட்டோம். சீனா அமெரிக்காவிடம் உதவியும் கேட்டுள்ளது. அதேபோல் உலக நாடுகளிடமும் சீனா இது தொடர்பாக உதவி கேட்டு இருக்கிறது.

    English summary
    Coronavirus: Death Toll increases to 1662 in China mainland.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X