ஈரானில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 129 பேர் பலி; உயிரிழப்பு எண்ணிக்கை 1685
டெஹ்ரான்: இத்தாலியைப் போல ஈரானிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகி உள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1685 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
சீனாவைத் தவிர இத்தாலி, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. சீனாவின் கொரோனாவின் தாக்கமே கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் சீனாவின் அறிவிப்பை உலக நாடுகள் இன்னமும் நம்பவில்லை. ஏனெனில் இத்தாலி உள்ளிட்ட நாடுகளை கொரோனா வைரஸ் மிக கொடூரமாக தாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஈரானும் மிக மோசமான அழிவை சந்தித்து வருகிறது.
இத்தாலியை மயானபூமியாக்கும் கொரோனா-ஒரே நாளில் 651 பேர் பலி.. உயிரிழப்பு எண்ணிக்கை 5,476 ஆக அதிகரிப்பு
ஈரானில் நேற்று ஒரே நாளில் மட்டும் 129 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1685 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஈரான், அமெரிக்காவில்தான் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.