கொரோனா: ஈரானில் 24 மணிநேரத்தில் 143 பேர் பலி- உயிரிழப்பு எண்ணிக்கை 2,077 ஆக அதிகரிப்பு
டெஹ்ரான்: ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,077 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் நேற்று ஒரே நாளில் 143 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அரபுநாடுகளில் ஈரானில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. ஈரானில் மொத்தம் 27,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது மேலும் 2,000 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று நோய் தாக்கம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் ஈரானில் ஒரே நாளில் நேற்று 143 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,077ஆக உயர்ந்துள்ளது. ஈரானைப் பொறுத்தவரை எந்த ஒரு வெளிநாட்டு உதவியையும் ஏற்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறது.
ஊரடங்குகளை அமல்படுத்துவதால் மட்டுமே கொரோனா வைரஸை அழித்துவிட முடியாது: உலக சுகாதார நிறுவனம்
Recommended Video
இதனிடையே செளதி அரேபியாவில் கொரோனாவுக்கு 2-வதாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து செளதி அரேபியாவில் பயண கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.