கொரோனா: ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ எட்டியது!
டெஹ்ரான்: கொரோனா தொற்று நோயால் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 2,000ஐ எட்டியுள்ளது.
கொரோனாவின் தாக்கத்தால் இத்தாலியில் ஒவ்வொரு நாளும் பல நூறு பேர் பலியாகி வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கல் உக்கிரமாக இருந்து வருகிறது.
இந்தியாவிலும் 11 பேரை கொரோனா வைரஸ் பலி கொண்டிருக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கான லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது நள்ளிரவில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
கம்யூனிட்டி பரவல்?.. சைதாப்பேட்டையில் அந்த ஒரு கேஸ்.. கொரோனா வந்தது எப்படி? நீடிக்கும் மர்மம்!
இந்நிலையில் ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000ஐ எட்டியுள்ளது. ஈராக்கில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். செளதி அரேபியாவில் கொரோனாவுக்கு முதலாவதாக ஒருவர் பலியாகி உள்ளார். பஹ்ரைனில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.
இதனிடையே எந்த ஒரு வெளிநாட்டு உதவியும் தங்களுக்கு தேவை இல்லை என ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது.