கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது- வாழ பழக வேண்டும்- கைவிரித்த உலக சுகாதார நிறுவனம்
ஜெனிவா: மனித குலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை அடியோடு அழிக்க முடியாது; அதனுடன் வாழ பழகுவது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
Recommended Video
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸை உலகத்தில் இருந்து நாம் அடியோடு அழித்துவிட முடியாது. அது எப்போது நம்மிடமிருந்து விலகி மறையும் என்பதை கணிக்கவும் முடியாது.
ஆட்கொல்லி வைரஸான ஹெ.ஐ.வி. போல கொரோனாவும் உயிர்ப்புடன் நம்முடனேயே இருக்கும். கொரோனா வைரஸ் என்பது நீண்டகாலத்துக்கு பிரச்சனையை ஏற்படுத்தவும் செய்யலாம்.
அதேநேரத்தில் கொரோனாவால் நீண்டகாலம் பிரச்சனை வராமலும் போகலாம். ஆனால் கொரோனா எப்போது அழியும் என்பதை யாராலும் முன்னரே கூறிவிட முடியாது.
தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் இருக்கும் சூழ்நிலையில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மருந்துகள் சோதனைக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் கொரோனாவுக்கு எதிரான வலிமையான மருந்து இதுதான் என ஒன்றை சுட்டிக்காட்டி உறுதி செய்வது கடினமாக உள்ளது. இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78, 055; உயிரிழப்புகள் 2,551 ஆக அதிகரிப்பு