கொரோனா வைரஸ்.. பிலிப்பைன்ஸின் லூசன் தீவில் தனிமைப்படுத்தப்பட்ட 5.7 கோடி மக்கள்
மணிலா: கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதை தடுக்க பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை லூசன் தீவு தனிமைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அங்கு 5.7 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.
Recommended Video
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 164000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6500 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலகின் பல நாடுகளை தாக்கிய கொரோனா வைரஸ் பிலிப்பைன்ஸ் நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
பிலிப்னைஸில் இதுவரை 142 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளதாகவும் இதுவரை 12 பேர் இறந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இந்நிலையில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதை தடுக்க பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள லூசன் தீவு வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை தனிமைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ்க்கு முதல் தடுப்பூசி.. பரிசோதனையை தொடங்கியது அமெரிக்கா
மிகப்பெரிய அந்த தீவில் சுமார் 5.7 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அந்த தீவில் வாழும் மக்கள் உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும். தேவையில்லாமல் வரவேண்டாம் என்று அறிவித்தார். உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே லூசன் தீவில் திறந்திருக்க வேண்டும் என்று மற்ற அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும் அதிபர் அறிவித்துள்ளார்.