ஒரே புழுக்கம்.. டூ பீஸில் வந்த நர்ஸ்.. ஸீத்ரூ கவச உடையுடன் பணியாற்றியதால் பரபரப்பு.. ரஷ்யாவில்!
ரஷ்யாவில் கொரோனா வார்டுக்குள் பிகினி உடையில் நுழைந்தார் நர்ஸ்
மாஸ்கோ: கொரோனாவிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் ரஷ்யாவில் ஒரு நூதன சம்பவம் நடந்துள்ளது. அதாவது நர்ஸ் ஒருவர் தான் அணிய வேண்டிய பாதுகாப்பு கவச உடையை பிகினி ஸ்டைலில் அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஆகி வடி்டது. அவரை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளனராம்.
இந்த புகைப்படமும் இப்போது வைரலாகியுள்ளது. அந்த நர்ஸ் யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை. உடலுக்குள் மேலும் கீழும் மட்டுமே அவர் உள்ளாடை அணிந்துள்ளார். அந்த இரண்டும் அப்பட்டமாக வெளியில் தெரிவது போல ஒரு ஸீத்ரூ உடையை போட்டுக் கொண்டு வார்டில் பணியாற்றினார்.
இந்த காட்சி வைரலானதும் அந்த மருத்துவமனை நிர்வாகம் நர்ஸைக் கூப்பிட்டு இப்படியா வருவது என்று கண்டித்துள்ளனர்.. ஆனால் தான் தவறு செய்யவில்லை என்றும், இந்த ஸீத்ரூ உடையும் பாதுகாப்பு கவச உடைதான் என்றும் விளக்கியுள்ளார் அந்த நர்ஸ். இருந்தாலும் அவரது விளக்கத்தை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லையாம்.
மாஸ்கோவின் தெற்கில் உள்ளது துலா என்ற பிராந்தியம். இங்குதான் இந்த நர்ஸ் ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்த உடையுடன் அவர் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது போன்ற தனது பணிகளிலும் அக்கறையுடன் ஈடுபட்டுள்ளார். இந்த உடையை நர்ஸ் தேர்ந்தெடுத்ததிலும் ஒரு நியாயமான காரணம் இருக்க்ததான் செய்கிறது.
அதாவது இந்த பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவச உடையை போட்டுக் கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க முடியாது. அதிகமாக தண்ணீர் குடிக்க முடியாது. வியர்த்துக் கொட்டி எடுக்கும். மிகவும் அசவுகரியமான உடை இது. இப்படி கடும் சிரமத்துக்கு மத்தியில்தான் டாக்டர்களும், நர்ஸுகளும் நமக்காக பாடுபட்டுக் கொண்டுள்ளனர். இதே காரணத்தால்தான் இந்த நர்ஸும் ஸீத்ரூ உடைக்கு மாறியுள்ளார்.
மரத்தில் பிணமாக தொங்கிய வெங்கடேஷ்.. நடிகை வாணிஸ்ரீயின் மகன்.. என்ன நடந்தது.. சென்னையில் பரபரப்பு!
Recommended Video
இந்த நர்ஸ் பணியாற்றி வரும் மருத்துவமனையானது கொரோனாவைரஸ் ஹாட்ஸ்பாட்டுக்குள் வருகிறது. இந்த நர்ஸின் உடைக்கு நோயாளிகள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லையாம். ஒரு நோயாளி மூலம்தான் இந்த புகைப்படம் வெளியில் பரவியதாகவும் சொல்கிறார்கள். இருப்பினும் டிரஸ் கோடை மீறி விட்டதாக கூறி அந்த நர்ஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.