40 அடி சுவரின் மேல் செக்ஸ்: தவறி விழுந்த ஜோடி பலி
லண்டன்: பிரான்ஸை சேர்ந்த ஜோடி ஒன்று வரலாற்று சிறப்புமிக்க அரண்மனை ஒன்றின் சுற்றுச்சுவரில் உறவு வைக்கையில் தவறி விழுந்து பலியாகியுள்ளது.
பிரான்ஸில் உள்ள நார்மன்டி பகுதியைச் சேர்ந்த 30களில் இருக்கும் ஆண் மற்றும் பெண் சேர்ந்து இங்கிலீஷ் சானலில் உள்ள சாசி தீவில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க வாபான் போர்ட்ஸ் அரண்மனைக்கு கடந்த புதன்கிழமை சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் அரண்மனையின் சுற்றுச்சுவரில் ஏறி அமர்ந்துள்ளனர்.
சுவரின் மீது அவர்கள் உறவு வைத்துள்ளனர். அப்போது அங்கிருந்து தவறி விழுந்துள்ளனர். 40 அடி உயர சுவரில் இருந்து தவறி அகழியில் விழுந்தனர். இதில் அந்த ஆண் மற்றும் பெண் பலியாகினர்.
வியாழக்கிழமை காலை அகழியில் ஒரு ஆணும், பெண்ணும் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் ஆடைகள் சுவரின் மீது இருந்தது.
அவர்கள் இருவரும் 1984ம் ஆண்டு பிறந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.