கைது செய்து காருக்குள் கட்டி போட்டால்.. கசமுசா.. ஆடி போன போலீஸ்.. அமெரிக்காவில் ஷாக்!
கைது செய்து காருக்குள் வைத்தால், காரிலேயே கசமுசாவில் ஈடுபட்டுள்ளது ஒரு ஜோடி
Recommended Video
புளோரிடா: ஆணும், பெண்ணும் டிரஸ்ஸே இல்லாமல் காருக்குள் கிடந்த காட்சியை கண்டு போலீசார் ஆடிப்போய்விட்டனர்.
ஃபுளோரிடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆரோன் தாமஸ்.. இவருக்கு 31 வயதாகிறது. மேகான் மண்டோரனா என்ற பெண்ணுக்கு 35 வயதாகிறது.
இவர்கள் இருவரும் ராத்திரி நேரத்தில் தண்ணி அடித்துவிட்டு காரில் வந்துள்ளனர். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காரில் லைட்கூட ஆன் பண்ணாமல் கார் வந்து கொண்டிருப்பதை பார்த்ததும் அதிர்ந்தனர்.
பின்னர், அந்த கார், எதிரே வந்த ஒரு வாகனத்தில் மோதியது. அந்த வாகனத்தில் வந்தவர் வேறு யாருமில்லை.. அவர் ஒரு போலீஸ் அதிகாரி ஆவார்! இதையடுத்து, அந்த காரினை போலீசார் தடுத்து நிறுத்தி ஓரங்கட்டினர்.
2 கையையும் விட்டுட்டு.. ஹேண்டில் பாரை பிடிக்காமல்.. தப்பு தம்பி மேலதான்.. போலீஸ்காரர் மேல இல்லை!
பின்னர், இருவரையும் கைது செய்து போலீஸ் வாகனத்தின் பின்பிக்க சீட்டில் உட்கார வைத்துவிட்டு, நடந்த சம்பவம் குறித்து காருக்கு வெளியில் நின்று கொண்டு போலீசார் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் அதிகாரி, கைது செய்யப்பட்டவர்களை யதேச்சையாக காருக்குள் பார்த்தார்.
அப்போது, அந்த ஆணும், பெண்ணும், கடகடவென தங்களது டிரஸ்களை களைந்து ஜாலியாக இருக்க ஆரம்பித்து விட்டனர். இதனை பார்த்து அதிகாரி பதறிபோய் விட்டார். கொஞ்சம் விட்டிருந்தால் ரெண்டு பேருமே நிர்வாணமான நிலைக்கே போயிருந்து இருப்பார்கள்.
இதையடுத்து, கதவை திறந்து, அவர்களில் ஒருவரை விடுவிக்கலாம் என்று அதிகாரி கதவை திறந்தால், அதற்குள் ஆரோன் தப்பி ஓட முயன்றார். ஆனால் பாதுகாப்பு போலீசார் அவரை விரட்டி பிடித்து கொண்டு வந்தனர்.