அதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்!
ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள் உருவாகி உள்ளதாக ஹூ தெரிவித்துள்ளது
ஜெனீவா: உலக அளவில் கடந்த ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் இத்தனை அதிகம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது, அது வேகமாக மீண்டும் பரவி வருவதையே காட்டுவதாகவும் ஹூ தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நிலவரம் குறித்த வாராந்திர ஆய்வு விவரத்தை வெளியிட்டுள்ளது ஹூ. அதன்படி 2வது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் இங்குதான் தற்போது அதிகமாக கொரோனா பரவி வருகிறது.
ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் 10.3 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது உலக அளவில் இது 46 சதவீதமாகும். ஐரோப்பாவில் பலி எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. முந்தைய வாரத்தை விட கடந்த வாரத்தில் இது 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேசமயம், கடந்த குளிர்காலத்தில் ஏற்பட்ட பலியை விட இப்போது குறைவாகவே உள்ளது. ஐரோப்பாவின் 21 நாடுகளில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும், ஐசியூ தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம்.
கொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்!
அதுமட்டுமல்ல, கடந்த 3 வாரமாக அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாரத்திற்கு 1 லட்சம் பேருக்கே என்ற அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த 2 வாரமாக பாதிப்பு குறைந்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கையும் குறைந்து வரகிறது. தினசரி பாதிப்பு தற்போது 40 முதல் 50,000 என்ற அளவில் குறைந்திருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,893 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.