கார் விபத்தால் 6 நாட்கள் காட்டில் சிக்கிய பெண்.. உயிரைக் காப்பாற்ற சிறுநீர் குடித்த பரிதாபம்!
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நடுக்காட்டில் சிக்கிய பெண் ஒருவாரம் சிறுநீர் பருகியது தெரிய வந்துள்ளது.
Recommended Video
சிட்னி: விபத்தால் சுமார் ஆறு நாட்கள் காட்டிற்குள் மாட்டிக் கொண்ட பெண் ஒருவர், தன் சிறுநீரையே தாகத்திற்கு தண்ணீராக உட்கொண்டு உயிர் பிழைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் புரூக் பிலிப்ஸ்(40 ) என்ற பெண். கடந்த மாதம் இவர் பயணம் செய்த கார் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. இதில், காரோடு உருண்டு சென்று நடுக்காட்டில் சிக்கினார் புரூக். மனித நடமாட்டமே இல்லாத அப்பகுதியில் இருந்து எப்படி தப்பித்து வெளியில் செல்வது என அவருக்குத் தெரியவில்லை.
இதனால் தன்னைக் காப்பாற்ற யாராவது வரும் வரை எப்படியும் இந்தக் காட்டிற்குள் வாழ வேண்டும் என அவர் முடிவு செய்தார். காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதோடு, தினமும் தனக்கான உணவை உருவாக்குவதும் அவருக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.
விபத்தில் சிக்கிய காரில் இருந்த பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களும், மழை நீரும் முதல் சில நாட்களுக்கு உதவின. அதற்குப் பிறகு அவருக்கு உணவு மற்றும் தண்ணீருக்கு வழியில்லாமல் போனது. இதனால் தனது சிறுநீரையே தாகத்திற்குப் பருக ஆரம்பித்தார்.
திருமணத்திற்கு செல்லும் போது மாப்பிள்ளைக்கு துப்பாக்கி சூடு.. கையில் பாய்ந்த குண்டுடன் டும் டும்!
இதற்கிடையே காரில் சென்ற புரூக்கைக் காணவில்லை என அவரது குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். இதில் அவரது கார் விபத்தில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் அவர் காட்டில் இருந்து மீட்கப்பட்டார்.
காட்டிற்குள் சிக்கிக் கொண்ட பொதும், சமயோஜிதமாகச் செயல்பட்டு தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்ட புரூக்கை மீட்புப் படையினர் பாராட்டியுள்ளனர்.