For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே கிராஸிங்கில் ஓடிய நபர்.. இரண்டு புறமும் வேகமாக வந்த ரயில்.. அடுத்து நடந்த ஆச்சர்யம்!

நெதர்லாந்தில், ரயில்வே கிராஸிங்கில் வேகமாக கடந்த நபர் ஒருவர் கடைசி நொடியில் உயிர் தப்பிய சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நூழிலையில் உயிர் தப்பிய நபர்-வீடியோ

    ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில், ரயில்வே கிராஸிங்கில் வேகமாக கடந்த நபர் ஒருவர் கடைசி நொடியில் உயிர் தப்பிய சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

    நெதர்லாந்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. ஆனால் நெதர்லாந்தில் எந்த பகுதியில் இந்த நிகழ்வு நடந்தது என்று தெரியவில்லை.

    5 நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையம் முழுக்க இப்போதுதான் வெளியாகி வைரலாகி உள்ளது.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    அந்த வீடியோவில் இருந்த நபர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வரும் போது ரயில்வே கிராஸிங் போடப்பட்டுள்ளது. இதனால் அவர் கிராஸிங் முடிவில் சைக்கிளை நிறுத்திவிட்டு காத்திருந்துள்ளார். ரயில் அந்த பகுதியை கடக்கும் வரை காத்திருந்தார்.

    அடுத்த பக்கம்

    அடுத்த பக்கம்

    ரயில் சென்றவுடன் வேகமாக சைக்கிளை எடுத்தவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். சைக்கிளை ஓட்டாமல் வேகமாக தள்ளிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஆனால் இந்த ரயிலுக்கு எதிர்புறத்தில் இன்னொரு டிராக்கில் வேறு ஒரு ரயில் வந்துள்ளது.

    இன்னொரு ரயில் வந்தது

    இன்னொரு ரயில் வந்தது

    இன்னொரு ரயிலை கவனிக்காத அவர் வேகமாக அந்த தண்டவாளத்தில் ஓடினார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த ரயில் வந்துவிட்டது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வேகமாக தண்டவாளத்தை கடந்தார்.

    தப்பினார்

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர் தப்பினார். இவருக்கு எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை. இந்த வீடியோ இப்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Didn't see that coming: Cyclist escapes last minute in railway crossing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X