கோணிப்பைக்குள்ளிருந்து.. தலையை வெளியே எட்டி பார்த்து.. பரிதாப நாய்கள்.. பதற வைக்கும் நாகாலாந்து ஷாக்
நாகலாந்தில் நாய்க்கறி விற்பனைக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது
கோஹிமா: பாவம்.. கோணிப்பைக்குள் திணித்து, அதன் வாயையும் கட்டி.. கொன்று விற்பதற்காக ஒருவர் நாயை மார்க்கெட்டுக்கு கொண்டு போனார்.. இந்த ஒரு போட்டோதான் ஒரு மாநிலமே அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட காரணமாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா?
Recommended Video
சீனாவில் அன்று வூஹானின் மீன் மார்க்கெட்டில் இருந்து கிளம்பி வந்த இந்த கொரோனா, இன்று உலக மக்களை தன் பிடியில் வைத்து கொண்டு ஆட்டி படைத்து வருகிறது.
இந்த பீதியால் சிக்கன், மட்டனை எல்லாம் நம்மால் சாப்பிட கூட முடியாத பயத்தை 2 மாசத்துக்கு முன்பு இந்த கொரோனா தந்துவிட்டது.. ஆனால் எங்கே இந்த தொற்று ஆரம்பித்ததோ, அவர்கள் வழக்கம்போல் வவ்வால், பூனை என்று கடையை விரித்து கொண்டு விற்பனை செய்து வருகிறார்கள்.
எனினும், உலக நாடுகளில் இந்த அச்சம் இன்னும் விலகவில்லை. அந்த வகையில், நாகலாந்தில் நாய்க்கறிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது..
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றுதான் நாகலாந்து.. இங்கு வழக்கமாக நாய்க்கறியைதான் சாப்பிடுவார்கள்.. இவர்களது பிரதான உணவே இதுதான்.. இதை சில குறிப்பிட்ட மக்கள் இங்கு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
மேற்கு வங்காளம் உள்பட மற்ற மாநிலங்களில் இருந்து நாய்கள் இதற்காகவே நாய்கள் இங்கு பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்படும்.. அதாவது ஒரு நாய் 50 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குவார்கள். தற்போது கொரோனா பாதிப்பினால் இதெல்லாம் நிறுத்தியிருப்பார்கள் என்று நினைத்தால், இந்த நாய்களை நாகலாந்தில் உள்ள திமாப்பூர் என்ற மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அமெரிக்காவின் 7 மாநிலங்களில் கொரோனா படு வேக பரவல்.. சுதந்திர நாளில் மியாமியில் ஊரடங்கு!!
நாய்களை விற்கும் போட்டோவும் சோஷியல் மீடியாவில் பரவவும், இதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.. ஒரு கோணிப்பையில் நாயை உள்ளே போட்டு, அதன் வாயையும் கட்டி வைத்திருந்தனர்.. அந்த நாய் கத்த கூடமுடியாமல், கோணிப்பைக்குள் இருந்து கலக்கத்துடன் எட்டிப் பார்க்கிறது.. இப்படி சாக்கு பையில் கட்டி ஒருவர் சந்தைக்கு எடுத்து போகும் போட்டோவை பார்த்ததுமே, நாய்க்கறிக்கு தடை வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.
அதுமட்டுமில்லை, உடனடியாக, விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளும் மாநில அரசுகளுக்கு பல்வேறு மனுக்கள் வரிசையாக அனுப்பப்பட்டன.. இதற்கு பிறகுதான், நாய்க்கறி விற்பனைக்கு நாகலாந்து அரசு தடையை அறிவித்துள்ளது... நாய் இறைச்சி ஏற்றுமதி, நாய் இறைச்சி சந்தைகள், சமைக்கப்பட்ட நாய் இறைச்சி உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் அரசு தெரிவித்துள்ளது.